அவ்விரவின் என் பங்கு தூக்கம் மறக்கிறேன் நான்…
என் மடிமீது முகம் புதைத்து அவள் தூங்கும் அழகில்….
அவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…
அவ்விரவின் என் பங்கு தூக்கம் மறக்கிறேன் நான்…
என் மடிமீது முகம் புதைத்து அவள் தூங்கும் அழகில்….
முதல் முறை சொல்கிறேன் “முகப்பரு” கூட அழகென்று….
அவளிடமதைக் கண்டதால்…
அவளடி நின்ற நிலத்தின் அடுத்த அடி தன் விலையை தானே கூட்டிக்கொள்கிறது….
உருகும் பனிக்கூழும் உயிர்பெருகிறது,
அவளிரு கைக்குள் குடி புகுகையில்,
அவள்பா அன்பினால்…
அவள் முகம் பார்த்ததில் தன் மறுமுகம் கண்டது நிலா!!!
அவளது முகம் காட்டி நிலாச் சோறு ஊட்டியது தாய் நிலா தன் கூட்டத்திற்கு – அதன் வானத்தில் ….
யாருமில்லா இரவுகளில் கண்விழித்து அவள் பாதச்சுவடு தேடுகிறது – நிலா….
வந்த வழி மறந்து எதிர் வழி செல்கிறது நிலா – அவளைப் பார்த்ததிலிருந்து…
அவளின் கருவிழிக் கண்கள் இரு வெளிக் கோள்களானது – நிலா காண…
இடவல இடம் நகர மறுக்கிறது நிலா – அவள் நின்றதைப் பார்க்கையில் மட்டும்….