கடவுள்களுக்கு தேவைப்படுவது போல
நல்ல நேரம்,
நல்ல நாள்,
நல்ல காலமெல்லாம்
தேவதைகளுக்கு எப்போதும்
தேவைப்படுவதில்லை.
தேவதைகள் வந்து செல்லும் அச்சிறு கணத்திலும் நம் வாழ்வில் எதிர்பார்த்திராத, காத்திருக்காத அந்த அற்புதத்தை நிகழ்த்திவிடுகிறார்கள்.
அன்பைத் தவிர தேவதைகளுக்கு ஆண்பால், பெண்பால் என அடையாளம் இருப்பதில்லை. அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கிறார்கள்.
கட்டுப்பாடுள்ள கடவுள்களின் மீது நம்பிக்கை இல்லையே தவிர, யாராக வேண்டுமானாலும் இருக்கும் எளிமையான தேவதைகளின் மீது பெரும் நம்பிக்கை உண்டெனக்கு.
Recent Comments